Wednesday, September 28, 2011

விட்டு பிரிகையில் ...


வேரோடு பிடுங்கி
வேறிடத்தில் நட்டு
வேலி கட்டி பாதுகாத்து
தண்ணீரோடு கண்ணீரும் உற்றி
பத்திரமாய் இருக்கும்படி
சொல்லிவிட்டு சென்றிருக்கலாம்தான்.

ம்ம்..

நீ பிளாஸ்டிக் செடி
என்றறிந்த தருணத்தில்
மரணித்துவிட்டது எல்லாம்.