Thursday, September 29, 2011

கையோடு கொஞ்சம் வானம்.



கொஞ்சம் வானத்தை
சிறகோடு சுமந்து வந்தது
ஒரு வண்ணத்துபூச்சி.
வனத்தின் ஆகப்பெரிய
மலர் மீது வானத்தின்
வாசனையை தடவிவிட்டு
வந்த வேலை முடிந்ததென
சட்டென்று பறந்தது.

Wednesday, September 28, 2011

விட்டு பிரிகையில் ...


வேரோடு பிடுங்கி
வேறிடத்தில் நட்டு
வேலி கட்டி பாதுகாத்து
தண்ணீரோடு கண்ணீரும் உற்றி
பத்திரமாய் இருக்கும்படி
சொல்லிவிட்டு சென்றிருக்கலாம்தான்.

ம்ம்..

நீ பிளாஸ்டிக் செடி
என்றறிந்த தருணத்தில்
மரணித்துவிட்டது எல்லாம்.

Friday, September 23, 2011

கவிஞனின் தூரிகை


என் கவிதைகளை
இனி வார்த்தைப்படுத்த
முடியுமென்று தோன்றவில்லை.

எண்ணங்கள் அனைத்தும்
பிம்பங்களாகவும் குறியீடுகளாகவும்
தோன்றி மறைகின்றன.

எண்ணங்களை வரைந்தேவிடலமேன்றலோ
தூரிகையிலிருந்து ஒரு சேர
வழிகிறது கண்ணீரும் காதலும் .
சொற்களோ கதவடைத்து விட்டன
வண்ணங்களோ போதா புரட்சி செய்கின்றன.

சொல்லாமலே விட்டு போய்விட்டாலும்
உன்னிடம் சொல்ல ஏதோ
இருந்ததென யூகித்துக்கொள்.

சில வானங்களுக்கு அப்பால்.....

நான் விட்டு வந்த
வெளி எல்லாம்
உன் வன்ம வார்த்தைகள்.
என் ஒற்றை
காலடி சுவடுகள் மேல்
உன் புதிய துணையின் கால் மிதிகள்.

சில வானங்களுக்கு அப்பால்
மொழி தெரியாத
கடல் யட்சனிடம்
மோட்சம் யாசிக்கிறேன் நான்.

நீ ஏனோ
உன் புதிய அடையாளங்களை
புதிய கண்ணாடிகளில்
தேடி கொண்டிருக்கிறாய்.

கொஞ்சம் நட்பேனும் மிச்சமிருந்திருந்தால்
உன்னை கண்ணாடிகளிடமிருந்து மீட்டு
சுய தேடலுக்கு
அறிமுகப்படுத்தியிருப்பேன்.