Tuesday, June 16, 2009

மழை


நான் காடுகளில் தொலையப்போகும் அந்த நாளில் கன மழை பெய்ய வேண்டும்.

என்னிடம் வார்த்தைகள் தீர்ந்து போகும் ஒரு வெறுமையான பொழுதில் அவ்விடத்தை மழை நிரப்ப வேண்டும்..

சத்தியமாய் அதை பற்றி நான் கவிதையோ அல்லது கவிதை போன்ற ஏதோ ஒன்றையோ எழுதிவிட கூடாது..

என் அன்மாவை நனைத்த ஒற்றைத் துளியாய் என்னோடு மட்டும் அது பேசிக்கொண்டிருக்க வேண்டும்

நான் முழுவதுமாய் சிந்தி சிதறும் வரை......

Friday, June 12, 2009

ஒரு கண்ணாடியின் மரணம்


என் வாழ்வின் முடிவுகளை பிறர் எடுக்கும் அளவிற்கு
என்னை முடமாக்கிய உன் செய்கைகளால் கூட
உன் மீதான என் காதலை குறைக்க முடியவில்லை

ஆனால் முடிவுகள் மட்டும் இனி எப்போதும்
என்னுடையவை அல்ல
அவை என்னை சுற்றி எடுக்கடுபவை
அவை தானியங்கிகள்
நான் அவற்றால் செயல் படுத்த படுகிறேன்

என் வாழ்வின் இந்நிலைக்கு உன் ஒரு நிமிட
கோபம் மிகுதியே கரணம் என்று தெரிந்திருந்தாலும்
இன்னும் உன்னை முழுவதுமாய் வெறுக்க இயலவில்லை

என் உணர்வுகளோடு நீ செய்த விளையாட்டிற்கு
விலையாய் என் வாழ்வு அடகு கிடக்கிறது
மீட்டெடுக்க முடியாத ஒரு ஆழ் கிடங்கில்

நன்றி

A Feather in the Wind


To the one with sunshine in her eyes

We pray all day and night

May this feather blowing in the wind

Bring love to lighter you from within

With a touch as gentle as your heart

Bring colours to brighten to your life!


. .. . . .Thanks!