Thursday, September 29, 2011

கையோடு கொஞ்சம் வானம்.



கொஞ்சம் வானத்தை
சிறகோடு சுமந்து வந்தது
ஒரு வண்ணத்துபூச்சி.
வனத்தின் ஆகப்பெரிய
மலர் மீது வானத்தின்
வாசனையை தடவிவிட்டு
வந்த வேலை முடிந்ததென
சட்டென்று பறந்தது.

1 comment:

flower said...

good capture and suitable comment.