Friday, September 23, 2011

கவிஞனின் தூரிகை


என் கவிதைகளை
இனி வார்த்தைப்படுத்த
முடியுமென்று தோன்றவில்லை.

எண்ணங்கள் அனைத்தும்
பிம்பங்களாகவும் குறியீடுகளாகவும்
தோன்றி மறைகின்றன.

எண்ணங்களை வரைந்தேவிடலமேன்றலோ
தூரிகையிலிருந்து ஒரு சேர
வழிகிறது கண்ணீரும் காதலும் .
சொற்களோ கதவடைத்து விட்டன
வண்ணங்களோ போதா புரட்சி செய்கின்றன.

சொல்லாமலே விட்டு போய்விட்டாலும்
உன்னிடம் சொல்ல ஏதோ
இருந்ததென யூகித்துக்கொள்.

No comments: