இன்னாருக்கு
இந்த பெயரை
யார் சூட்டியிருப்பார்கள்.
அப்பெயரை இரண்டாக பிளந்து
முற்பாதியையும் பிற்பாதியையும்
வெவ்வேறு அழுத்தத்தில்
கீழ் முச்சை அடக்கி
நிதானமாக சொல்லி பார்க்கிறேன்.
அன்னாரின் முகத்தோடும்
பாவனைகளோடும்
சற்றும் பொருந்தாத
அந்த பெயர்
எங்களிடையே
ஒரு திரையாய் மட்டும்
எஞ்சி நிற்கிறது.
No comments:
Post a Comment