என் மோகத்தின் மைய்ய புள்ளிகளை
தேடித் தேடி நீள்கிறது
உங்கள் விரல்கள்.
தீண்டலும் நம் கண்களும்
சங்கமித்த அத்தருணம்.
உடல் முழுதும் உயிர் பாய்ந்த
கற்சிலை என
உறைந்து நிற்கிறேன் நான்.
தேடித் தேடி நீள்கிறது
உங்கள் விரல்கள்.
தீண்டலும் நம் கண்களும்
சங்கமித்த அத்தருணம்.
உடல் முழுதும் உயிர் பாய்ந்த
கற்சிலை என
உறைந்து நிற்கிறேன் நான்.
பின் கனத்த மௌனம்.
வெளியே நிழலாய் தெரியும்
மலைக்குன்றுகள் கூட
மேகங்களோடு உரிமையுடன்
கலவி, பின் கதை பேசி
உறங்க போயின.
நாம் மட்டும்
இன்னும் அசையாமல் நிற்கிறோம்.
வெளியே நிழலாய் தெரியும்
மலைக்குன்றுகள் கூட
மேகங்களோடு உரிமையுடன்
கலவி, பின் கதை பேசி
உறங்க போயின.
நாம் மட்டும்
இன்னும் அசையாமல் நிற்கிறோம்.
இந்த இரவின் தாக்கம் பெரிது.
உங்கள் ஏக்கம் பெரிது.
நாம் கைகளை பற்றிக்கொண்டு
நெற்றியோடு நெற்றியை இணைத்து
கண்களை மூடி
இனி கடக்க வேண்டும்
இந்த இரவையும்
இந்த வாழ்வையும்.
நெற்றியோடு நெற்றியை இணைத்து
கண்களை மூடி
இனி கடக்க வேண்டும்
இந்த இரவையும்
இந்த வாழ்வையும்.
No comments:
Post a Comment