Wednesday, March 31, 2010

Monitor முத்தமும் ஒரு thanglish கவிதையும்.


கணினி கடந்து
என்னை
தொட்டு விடவும்
நெருங்கி விடவும்
துடிக்கும் உன் தவிப்பு.

என்னோடு
மில்க் ஷேக்
பகிர்ந்து கொள்ளும்
பிரயத்தினத்தில்
பாழாய் போன
உன் கீ போர்ட்.

நீ வரைந்ததை
சரியான கோணத்தில்
அசையாமல் காட்டியபின்
நீ செய்யும்
அங்கீகார ஏக்க புன்னகை.

இப்படியான
virtual பரிமாற்றங்களில்
நீ தந்த
monitor முத்தங்களால்
ஈரமாகிறது
என் கன்னமும்
நம் உறவும்.

(என் அக்கா மகன் 4 வயது ஆதி கிட்ட இந்த கவிதைய அவன் வளந்த அப்புறம் படிச்சு காட்டாதீங்கplz!!!!!!)
ஓவியம்: ஆதித்யா

2 comments:

Ramya said...

Love this! I will read this to Adi :P

Jayasree said...

NO NO NO!! :D