Thursday, September 11, 2008

நான்


சொல் என்றொரு சொல் இல்லாமல் போனால் எண்ணங்களை எப்படி வெளிப்படுத்துவது..........................................
வெளிவர துடித்துக்கொண்டு உள்ளேயிருந்து எம்பி எம்பி பார்க்கும் சில அரூபமான கருத்துக்கள்...............
வார்த்தைகள் தீர்ந்து போன முடிவற்ற வெளியில் தனியே விடப்பட்டிருக்கிறேன்...........
சொல்லப்படாமலும் எழுதப்படாமலும் பேசப்படாமலும் எத்தனை சொற்கள் இந்த பிரபஞ்சத்தில் ஒர் முடிவு தேடி அலைகின்றனவோ.
யார் பேனா எவர் வாய் வழி இவை விட்டு விடுதலையாக போகின்றனவோ? பதில் கிடைக்காது அல்லது பதிலே இல்லை என்ற நிலையிலும் கூட தொடர்ந்து எழும் கேள்விகள். நான் என்று கூட ஒரு சொல்.. ம்ம்ம்... நான் என்றொரு சொல். இதில் என்னை நான் எப்படி உணர்த்துவது.
இதில் நான் எதை சொன்னாலும் கடைசியில் அது வெறும் சொல்லாகி விடப்போகிறது... என்னைப் பற்றி தோண்றிய வார்தைக்குப்பைகள் கோபம்
அன்பு அழகு
திமிர் குழந்தை காதல்
வெறுப்பு தனிமை நட்பு தூய்மை பொறாமை நடிப்பு பயம்
நான் என்கிற என் இருப்பை என் இருத்தலை தற்சமயம் இந்த வர்த்தைகள் தான் மீண்டும் மீண்டும் நிறுவிக் கொண்டிருக்கின்றன.. இதில் விடுபட்டுப் போன எல்லா சொற்கலும் உங்கள் மனதில் தோன்ற கடவதாக.. ..................................................................................................................................

2 comments:

Kumaresh said...

எனக்கு தோன்றியது...

"If you're not confused, you're not paying attention"

---
குமரேஷ்

Ameen said...

brilliant..!!!!!!!