Wednesday, April 25, 2012
Wednesday, November 16, 2011
மறைந்ததெல்லாம் காண்பமன்றோ...
Thursday, September 29, 2011
கையோடு கொஞ்சம் வானம்.
Wednesday, September 28, 2011
விட்டு பிரிகையில் ...
Friday, September 23, 2011
கவிஞனின் தூரிகை

என் கவிதைகளை
இனி வார்த்தைப்படுத்த
முடியுமென்று தோன்றவில்லை.
எண்ணங்கள் அனைத்தும்
பிம்பங்களாகவும் குறியீடுகளாகவும்
தோன்றி மறைகின்றன.
எண்ணங்களை வரைந்தேவிடலமேன்றலோ
தூரிகையிலிருந்து ஒரு சேர
வழிகிறது கண்ணீரும் காதலும் .
சொற்களோ கதவடைத்து விட்டன
வண்ணங்களோ போதா புரட்சி செய்கின்றன.
சொல்லாமலே விட்டு போய்விட்டாலும்
உன்னிடம் சொல்ல ஏதோ
இருந்ததென யூகித்துக்கொள்.
சில வானங்களுக்கு அப்பால்.....
நான் விட்டு வந்தவெளி எல்லாம்
உன் வன்ம வார்த்தைகள்.
என் ஒற்றை
காலடி சுவடுகள் மேல்
உன் புதிய துணையின் கால் மிதிகள்.
சில வானங்களுக்கு அப்பால்
மொழி தெரியாத
கடல் யட்சனிடம்
மோட்சம் யாசிக்கிறேன் நான்.
நீ ஏனோ
உன் புதிய அடையாளங்களை
புதிய கண்ணாடிகளில்
தேடி கொண்டிருக்கிறாய்.
கொஞ்சம் நட்பேனும் மிச்சமிருந்திருந்தால்
உன்னை கண்ணாடிகளிடமிருந்து மீட்டு
சுய தேடலுக்கு
அறிமுகப்படுத்தியிருப்பேன்.
Subscribe to:
Posts (Atom)




