
வெளி எல்லாம்
உன் வன்ம வார்த்தைகள்.
என் ஒற்றை
காலடி சுவடுகள் மேல்
உன் புதிய துணையின் கால் மிதிகள்.
சில வானங்களுக்கு அப்பால்
மொழி தெரியாத
கடல் யட்சனிடம்
மோட்சம் யாசிக்கிறேன் நான்.
நீ ஏனோ
உன் புதிய அடையாளங்களை
புதிய கண்ணாடிகளில்
தேடி கொண்டிருக்கிறாய்.
கொஞ்சம் நட்பேனும் மிச்சமிருந்திருந்தால்
உன்னை கண்ணாடிகளிடமிருந்து மீட்டு
சுய தேடலுக்கு
அறிமுகப்படுத்தியிருப்பேன்.
No comments:
Post a Comment