Wednesday, November 16, 2011

மறைந்ததெல்லாம் காண்பமன்றோ...




உற்று பார்த்து கொண்டிருந்தேன்
திரையில் தோன்றி மறைந்தன பெயர்கள்.
ஒன்றன் பின் ஒன்றாய்
வெவ்வேறு நீளத்தில் பல பெயர்கள்.
அடைமொழிகளுடன் சில
அடர்ந்த கைத்தட்டல்களோடு சில

திரைப்படம் துவங்கியது
இமை கவிழ்த்து
பார்வை விலக்கி
அமைதியாய் பார்க்க தொடங்கினேன்.